முகப்பு |
இறையும் அருந் தொழில் |
161. முல்லை |
இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய, |
||
கண் போல் நீலம் சுனைதொறும் மலர, |
||
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின், |
||
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய, |
||
5 |
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, |
|
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக் |
||
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப, |
||
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப் |
||
புள் அறிவுறீஇயினகொல்லோ-தெள்ளிதின் |
||
10 |
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் |
|
புதல்வற் காட்டிப் பொய்க்கும் |
||
திதலை அல்குல் தேம் மொழியாட்கே? | உரை | |
வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.
|