முகப்பு |
உரு கெழு தெய்வமும் |
398. நெய்தல் |
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே; |
||
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே; |
||
நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் |
||
சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து, |
||
5 |
ஓரை மகளிரும், ஊர் எய்தினரே; |
|
பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் 'முன், |
||
சென்மோ, 'சேயிழை?' என்றனம்; அதன் எதிர் |
||
சொல்லாள் மெல்லியல், சிலவே-நல் அகத்து |
||
யாணர் இள முலை நனைய, |
||
10 |
மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே. | உரை |
முன்னுற உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, 'நீ தான் இவளது தன்மையை ஆற்றுவி' எனச் சொல்லியது.- உலோச்சனார்
|