முகப்பு |
உரு கெழு யானை |
299. நெய்தல் |
உரு கெழு யானை உடை கோடு அன்ன, |
||
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ, |
||
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது |
||
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் |
||
5 |
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்: |
|
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ- |
||
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை |
||
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் |
||
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|