முகப்பு |
உள்ளார் கொல்லோ.....துணையொடு |
92. பாலை |
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு |
||
வேனில் ஓதி பாடு நடை வழலை |
||
வரி மரல் நுகும்பின் வாடி, அவண |
||
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் |
||
5 |
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் |
|
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர், |
||
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர, |
||
வில் கடிந்து ஊட்டின பெயரும் |
||
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே! | உரை | |
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.
|