முகப்பு |
உறை துறந்திருந்த |
164. பாலை |
'உறை துறந்திருந்த புறவில், தனாது |
||
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக, |
||
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச் |
||
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச் |
||
5 |
சொல்லின் தெளிப்பவும், தெளிதல் செல்லாய்- |
|
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர் |
||
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென, |
||
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ, |
||
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது |
||
10 |
மாறு புறக்கொடுக்கும் அத்தம், |
|
ஊறு இலராகுதல் உள்ளாமாறே. | உரை | |
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.
|