முகப்பு |
வண்ணம் நோக்கியும் |
148. பாலை |
வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும், |
||
'நீ அவண் வருதல் ஆற்றாய்' எனத் தாம் |
||
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே, |
||
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை, |
||
5 |
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி, |
|
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது, |
||
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் |
||
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து, |
||
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை |
||
10 |
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் |
|
அருஞ் சுரம் இறப்ப என்ப; |
||
வருந்தேன்-தோழி!-வாய்க்க, அவர் செலவே! | உரை | |
பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.-கள்ளம்பாளனார்
|