முகப்பு |
வயல் வெள் ஆம்பல் |
290. மருதம் |
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் |
||
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் |
||
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் |
||
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் |
||
5 |
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே! |
|
நீயே பெரு நலத்தையே; அவனே, |
||
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, |
||
தண் கமழ் புது மலர் ஊதும் |
||
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே. | உரை | |
பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|