முகப்பு |
ஓங்கித் தோன்றும் |
323. நெய்தல் |
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை |
||
நடுவணதுவேதெய்ய-மடவரல் |
||
ஆயமும் யானும் அறியாது அவணம் |
||
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் |
||
5 |
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
|
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: |
||
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த |
||
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, |
||
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் |
||
10 |
தெரி மணி கேட்டலும் அரிதே; |
|
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. |
உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|