முகப்பு |
வெண்ணெல் அரிநர் |
350. மருதம் |
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, |
||
பழனப் பல் புள் இரிய, கழனி |
||
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும் |
||
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என் |
||
5 |
தொல் கவின் தொலையினும் தொலைக! சார |
|
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக் |
||
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை |
||
சாடிய சாந்தினை; வாடிய கோதையை; |
||
ஆசு இல் கலம் தழீஇயற்று; |
||
10 |
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! | உரை |
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.-பரணர்
|