முகப்பு |
வைகல் தோறும் |
46. பாலை |
வைகல்தோறும் இன்பமும் இளமையும் |
||
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து; |
||
காணீர் என்றலோ அரிதே; அது நனி |
||
பேணீர் ஆகுவிர்-ஐய! என் தோழி |
||
5 |
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் |
|
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி, |
||
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர, |
||
வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து, |
||
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து, |
||
10 |
நன் வாய் அல்லா வாழ்க்கை |
|
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே. | உரை | |
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது.
|