முகப்பு |
கேளாய் எல்ல |
61. குறிஞ்சி |
கேளாய், எல்ல தோழி! அல்கல் |
||
வேணவா நலிய, வெய்ய உயிரா, |
||
ஏ மான் பிணையின் வருந்தினெனாக, |
||
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை, |
||
5 |
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், |
|
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில், |
||
'படு மழை பொழிந்த பாறை மருங்கில் |
||
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல், |
||
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக் |
||
10 |
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. | உரை |
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.-சிறுமோலிகனார்
|