முகப்பு |
கொக்கினுக்கு |
280. மருதம் |
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின் |
||
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் |
||
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும் |
||
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை |
||
5 |
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்- |
|
பழன யாமைப் பாசடைப் புறத்து, |
||
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும், |
||
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என் |
||
நல் மனை நனி விருந்து அயரும் |
||
10 |
கைதூவு இன்மையின் எய்தாமாறே. | உரை |
வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.- பரணர்
|