முகப்பு |
கொண்டல் ஆற்றி |
89. முல்லை |
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர், |
||
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி, |
||
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை |
||
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள், |
||
5 |
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் |
|
அகல் இலை அகல வீசி, அகலாது |
||
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை, |
||
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு, |
||
இன்னும் வருமே-தோழி!-வாரா |
||
10 |
வன்கணாளரோடு இயைந்த |
|
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே! | உரை | |
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-இளம் புல்லூர்க் காவிதி
|