முகப்பு |
சிலம்பின் மேய்ந்த |
359. குறிஞ்சி |
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா |
||
அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக, |
||
கன்று தாய் மருளும் குன்ற நாடன் |
||
உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது |
||
5 |
உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின், |
|
கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை |
||
வாடலகொல்லோ தாமே-அவன் மலைப் |
||
போருடை வருடையும் பாயா, |
||
சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே? | உரை | |
தோழி தழையேற்றுக் கொண்டு நின்று தலைமகன் குறிப்பின் ஓடியது-கபிலர்
|