முகப்பு |
நெடு நா ஒள் மணி |
40. மருதம் |
நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட, |
||
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர், |
||
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார், |
||
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப, |
||
5 |
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் |
|
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச, |
||
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் |
||
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் |
||
சீர்கெழு மடந்தை ஈர்-இமை பொருந்த, |
||
10 |
நள்ளென் கங்குல், கள்வன் போல, |
|
அகன் துறை ஊரனும் வந்தனன்- |
||
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே. | உரை | |
தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.-கோண்மா நெடுங்கோட்டனார்
|