முகப்பு |
நெய்யும் குய்யும் |
380. மருதம் |
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு |
||
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும், |
||
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற, |
||
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; |
||
5 |
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் |
|
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால் |
||
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் |
||
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; |
||
கொண்டு செல்-பாண!-நின் தண் துறை ஊரனை, |
||
10 |
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் |
|
புரவியும் பூண் நிலை முனிகுவ; |
||
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே! | உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-கூடலூர்ப் பல்கண்ணனார்
|