முகப்பு |
படு திரை கொழீஇய |
49. நெய்தல் |
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் |
||
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே; |
||
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப் |
||
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே; |
||
5 |
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, |
|
எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச் |
||
சென்று நாம் அறியின், எவனோ-தோழி! |
||
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ |
||
முன்றில் தாழையொடு கமழும் |
||
10 |
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? | உரை |
தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.-நெய்தல் தத்தனார்
|