முகப்பு |
பெரு நகை கேளாய் |
129. குறிஞ்சி |
பெரு நகை கேளாய், தோழி! காதலர் |
||
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் |
||
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச் |
||
செல்ப என்ப, தாமே; சென்று, |
||
5 |
தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை |
|
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை- |
||
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப, |
||
படு மழை உருமின் உரற்று குரல் |
||
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.-ஒளவையார்
|