முகப்பு |
மடக்கண் தகரக் |
170. மருதம் |
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள், |
||
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின், |
||
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள் |
||
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே; |
||
5 |
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்; |
|
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர், |
||
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது |
||
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம் |
||
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே? | உரை | |
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.
|