முகப்பு |
மடலே காமம் |
152. நெய்தல் |
மடலே காமம் தந்தது; அலரே |
||
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; |
||
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர, |
||
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; |
||
5 |
எல்லாம் தந்ததன்தலையும் பையென |
|
வடந்தை துவலை தூவ, குடம்பைப் |
||
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ, |
||
கங்குலும் கையறவு தந்தன்று; |
||
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே? | உரை | |
மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்
|