முகப்பு |
மழை தொழில் |
333. பாலை |
மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென, |
||
கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் |
||
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின், |
||
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் |
||
5 |
சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து, |
|
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி, |
||
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து, |
||
திருந்திழைப் பணைத் தோள் பெறுநர் போலும்; |
||
நீங்குகமாதோ நின் அவலம்-ஓங்குமிசை, |
||
10 |
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி |
|
நயவரு குரல பல்லி, |
||
நள்ளென் யாமத்து, உள்ளுதொறும் படுமே. | உரை | |
பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.-கள்ளிக் குடிப் பூதம் புல்லனார்
|