முகப்பு |
மறத்தற்கு அரிதால் |
42. முல்லை |
மறத்தற்கு அரிதால்-பாக! பல் நாள் |
||
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய |
||
பழ மழை பொழிந்த புது நீர் அவல |
||
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை |
||
5 |
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால், |
|
'ஏகுமின்' என்ற இளையர் வல்லே |
||
இல் புக்கு அறியுநராக, மெல்லென |
||
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ, |
||
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய |
||
10 |
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ |
|
அவிழ் பூ முடியினள் கவைஇய |
||
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே. | உரை | |
வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.-கீரத்தனார்
|