முகப்பு |
மனை உறை புறவின் |
162. பாலை |
'மனை உறை புறவின் செங் காற் பேடைக் |
||
காமர் துணையொடு சேவல் சேர, |
||
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் |
||
தனியே இருத்தல் ஆற்றேன்' என்று, நின் |
||
5 |
பனி வார் உண்கண் பைதல கலுழ, |
|
'நும்மொடு வருவல்' என்றி; எம்மொடு- |
||
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் |
||
யாயொடு நனி மிக மடவை!-முனாஅது |
||
வேனில் இற்றித் தோயா நெடு வீழ், |
||
10 |
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும், |
|
துஞ்சு பிடி வருடும் அத்தம் |
||
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே? | உரை | |
'உடன் போதுவல்' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.
|