மனை உறை புறவின்

162. பாலை
'மனை உறை புறவின் செங் காற் பேடைக்
காமர் துணையொடு சேவல் சேர,
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத்
தனியே இருத்தல் ஆற்றேன்' என்று, நின்
5
பனி வார் உண்கண் பைதல கலுழ,
'நும்மொடு வருவல்' என்றி; எம்மொடு-
பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை!-முனாஅது
வேனில் இற்றித் தோயா நெடு வீழ்,
10
வழி நார் ஊசலின், கோடை தூக்குதொறும்,
துஞ்சு பிடி வருடும் அத்தம்
வல்லை ஆகுதல் ஒல்லுமோ, நினக்கே?

'உடன் போதுவல்' என்ற தலைவிக்குத் தலைவன் சொற்றது.