முகப்பு |
யாங்கு ஆகுவமோ |
147. குறிஞ்சி |
யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்! |
||
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல் |
||
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று |
||
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி, |
||
5 |
அன்னை ஆனாள் கழற, முன் நின்று, |
|
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை |
||
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே; |
||
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து, |
||
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை |
||
10 |
பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு, |
|
தலை இறைஞ்சினளே அன்னை; |
||
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே? | உரை | |
சிறைப்புறமாகத்தோழி சொல்லியது.-கொள்ளம்பக்கனார்
|