முகப்பு |
யாங்குச் செய்வாம்.....பொன் வீ |
259. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ |
||
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல், |
||
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி, |
||
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப் |
||
5 |
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
|
சாரல் ஆரம் வண்டு பட நீவி, |
||
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி |
||
அரிய போலக் காண்பேன்-விரி திரைக் |
||
கடல் பெயர்ந்தனைய ஆகி, |
||
10 |
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே? | உரை |
தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்
|