முகப்பு |
யாம் செய் தொல் |
88. குறிஞ்சி |
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை? |
||
வருந்தல்; வாழி!-தோழி!-யாம் சென்று |
||
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக் |
||
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு |
||
5 |
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- |
|
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி, |
||
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது, |
||
கண்ணீர் அருவியாக |
||
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்லந்துவனார்
|