முகப்பு |
யாமமும் நெடிய |
378. நெய்தல் |
யாமமும் நெடிய கழியும்; காமமும் |
||
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல் |
||
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய, |
||
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்; |
||
5 |
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும், |
|
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய் |
||
அயல் இற் பெண்டிர் பசலை பாட, |
||
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல் |
||
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து, |
||
10 |
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி, |
|
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு |
||
நாடாது இயைந்த நண்பினது அளவே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
|