முகப்பு |
எள் |
328. குறிஞ்சி |
கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி, |
||
சிற்சில வித்திப் பற்பல விளைந்து, |
||
தினை கிளி கடியும் பெருங் கல் நாடன் |
||
பிறப்பு ஓரன்மை அறிந்தனம்: அதனால், |
||
5 |
அது இனி வாழி-தோழி!-ஒரு நாள், |
|
சிறு பல் கருவித்து ஆகி, வலன் ஏர்பு, |
||
பெரும் பெயல் தலைக, புனனே!-இனியே, |
||
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது |
||
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெருஞ் சாரல், |
||
10 |
விலங்கு மலை அடுக்கத்தானும், |
|
கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே. |
உரை | |
தோழி வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை வற்புறுத்தது.-தொல் கபிலர்
|