முகப்பு |
தழை அணி அல்குல் |
159. குறிஞ்சி |
'தழை அணி அல்குல் தாங்கல் செல்லா |
||
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, |
||
அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக் |
||
கொம்மை வரி முலை செப்புடன் எதிரின; |
||
யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை?' என்னும் |
||
அவல நெஞ்சமொடு உசாவாக் |
||
கவலை மாக்கட்டு-இப் பேதை ஊரே. | உரை | |
தலைமகன் சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறுத்தது; உயிர் செல வேற்று வரைவு வரினும் அது மாற்றுதற்கு நிகழ்ந்ததூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தன். |