முகப்பு |
மடவ வாழி மஞ்ஞை |
251. முல்லை |
மடவ வாழி-மஞ்ஞை மா இனம் |
||
கால மாரி பெய்தென, அதன் எதிர் |
||
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; |
||
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே! |
||
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர், |
||
புது நீர் கொளீஇய, உகுத்தரும் |
||
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே. |
உரை | |
பிரிவிடைத் தோழி. 'பருவம் அன்று; பட்டது வம்பு' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன். |