முகப்பு |
மாக்கழி மணிப்பூ |
55. நெய்தல் |
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப் |
||
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ, |
||
கையற வந்த தைவரல் ஊதையொடு |
||
இன்னா உறையுட்டு ஆகும் |
||
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே. | உரை | |
வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தற் கார்க்கியர் |