1-10 |
1 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!' |
|
என வேட்டோளே, யாயே: யாமே, |
|
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன் |
|
5 |
யாணர் ஊரன் வாழ்க! |
பாணனும் வாழ்க!' என வேட்டேமே. |
|
புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது'எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டு தலைவியோடு கூடி ஒழுகாநின்ற தலைமகன்தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது. |
2 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
விளைக வயலே! வருக இரவலர்!' |
|
என வேட்டோளே, யாயே: யாமே, |
|
'பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் |
|
5 |
தண் துறை ஊரன் கேண்மை |
வழிவழிச் சிறக்க!' என வேட்டேமே. |
|
இதுவும் அது. 2 |
3 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!' |
|
என வேட்டோளே, யாயே: யாமே, |
|
'வித்திய உழவர் நெல்லொடு பெயரும், |
|
5 |
பூக் கஞல் ஊரன் தன் மனை |
வாழ்க்கை பொலிக!' என வேட்டேமே. |
|
இதுவும் அது. 3 |
4 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!' |
|
என வேட்டோளே யாயே: யாமே, |
|
'பூத்த கரும்பின், காய்த்த நெல்லின், |
|
5 |
கழனி ஊரன் மார்பு |
பழனம் ஆகற்க!' என வேட்டேமே. |
|
இதுவும் அது. 4 |
5 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!' |
|
என வேட்டோளே, யாயே: யாமே, |
|
'முதலைப் போத்து முழு மீன் ஆரும் |
|
5 |
தண் துறை ஊரன் தேர் எம் |
முன்கடை நிற்க' என வேட்டேமே. |
|
இதுவும் அது. 5 |
6 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!' |
|
என வேட்டோளே யாயே: யாமே, |
|
'மலர்ந்த பொய்கை, முகைந்த தாமரைத் |
|
5 |
தண் துறை ஊரன் வரைக! |
எந்தையும் கொடுக்க! என வேட்டேமே. |
|
களவினில் பலநாள் ஒழுகிவந்து, வரைந்து கொண்ட தலைமகன் தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது. 6 |
7 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!' |
|
என வேட்டோளே யாயே: யாமே, |
|
'உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் |
|
5 |
தண் துறை ஊரன் தன் ஊர்க் |
கொண்டனன் செல்க!' என வேட்டேமே. |
|
இதுவும் அது. 7 |
8 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!' |
|
என வேட்டோளே, யாயே: யாமே, |
|
'அலங்குசினை மாஅத்து அணி மயில் இருக்கும் |
|
5 |
பூக் கஞல் ஊரன் சூள் இவண் |
வாய்ப்பதாக!' என வேட்டேமே. |
|
இதுவும் அது. 8 |
9 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!' |
|
என வேட்டோளே, யாயே: யாமே, |
|
'கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் |
|
5 |
தண் துறை ஊரன் கேண்மை |
அம்பல் ஆகற்க!' என வேட்டேமே. |
|
இதுவும் அது. 9 |
10 |
'வாழி ஆதன், வாழி அவினி! |
|
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க! |
|
என வேட்டோளே, யாயே: யாமே, |
|
'பூத்த மாஅத்து, புலால்அம் சிறு மீன், |
|
5 |
தண் துறை ஊரன் தன்னொடு |
கொண்டனன் செல்க!' என வேட்டேமே. |
|
இதுவும் அது. 10 |