21-30 |
21 |
முள்ளி நீடிய முது நீர் அடைகரைப் |
|
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் |
|
தண் துறை ஊரன் தெளிப்பவும், |
|
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!' |
|
'புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 1 |
22 |
அள்ளல் ஆடிய புள்ளிக் களவன் |
|
முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன் |
|
நல்ல சொல்லி மணந்து, 'இனி |
|
நீயேன்' என்றது எவன்கொல்? அன்னாய்!' |
|
களவினில் புணர்ந்து. பின்பு வரைந்து கொண்டு ஒழுகாநின்றதலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்றாக, ஆற்றாளாகியதலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2 |
23 |
முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டி, |
|
பூக் குற்று, எய்திய புனல் அணி ஊரன் |
|
தேற்றம் செய்து நப்புணர்ந்து, இனித் |
|
தாக்கு அணங்கு ஆவது எவன்கொல்? அன்னாய்! |
|
இதுவும் அது. 3 |
24 |
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு |
|
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் |
|
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன் |
|
பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் |
|
5 |
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்! |
'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்ப, தலைமகட்குச் சொல்லியது. 4 |
25 |
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங் காய் |
|
வயலைச் செங் கொடி களவன் அறுக்கும் |
|
கழனி ஊரன் மார்பு பலர்க்கு |
|
இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்! |
|
இதுவும் அது. 5 |
26 |
கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன் |
|
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் |
|
எம்மும், பிறரும், அறியான்; |
|
இன்னன் ஆவது எவன்கொல்? அன்னாய்! |
|
தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன்பொருந்தாநின்றான்' என்றவழி, தலைமகட்குத் தோழி, 'அவன்பாடு அஃது இல்லை' என்பதுபடச் சொல்லியது. 6 |
27 |
செந்நெல்அம் செறுவில் கதிர் கொண்டு, களவன் |
|
தண்ணக மண் அளைச் செல்லும் ஊரற்கு |
|
எல் வளை நெகிழச் சாஅய், |
|
அல்லல் உழப்பது எவன்கொல்? அன்னாய்! |
|
தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று' எனக் கருதி வருந்தும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 7 |
28 |
உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின், |
|
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு |
|
ஒண் தொடி நெகிழச் சாஅய், |
|
மென் தோள் பசப்பது எவன்கொல்? அன்னாய்! |
|
இற்செறிவித்த இடத்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று, தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8 |
29 |
மாரி கடி கொள, காவலர் கடுக, |
|
வித்திய வெண் முளை களவன் அறுக்கும் |
|
கழனி ஊரன் மார்பு உற மரீஇ, |
|
திதலை அல்குல் நின் மகள் |
|
5 |
பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்! |
வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தோடு நின்றது. 9 |
30 |
வேப்பு நனை அன்ன நெடுங் கண் களவன் |
|
தண்ணக மண் அளை நிறைய, நெல்லின் |
|
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் |
|
பெருங் கவின் இழப்பது எவன்கொல்? அன்னாய்! |
|
இதுவும் அது. 10 |