61-70 |
61 |
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் |
|
நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம், |
|
கை வண் மத்தி, கழாஅர் அன்ன |
|
நல்லோர் நல்லோர் நாடி, |
|
5 |
வதுவை அயர விரும்புதி நீயே. |
'வதுவை அயர்ந்தாள் ஒரு பரத்தையைச் சில் நாளில் விட்டு, மற்றொரு பரத்தையை வதுவை அயர்ந்தான்' என்பது அறிந்த தலைமகள் அவன் மனைவயின் புக்குழிப் புலந்தாளாக,'இது மறைத்தற்கு அரிது' என உடன்பட்டு, 'இனி என்னிடத்து இவ்வாறு நிகழாது' |
62 |
இந்திர விழவில் பூவின் அன்ன |
|
புன் தலைப் பேடை வரி நிழல் அகவும் |
|
இவ் ஊர் மங்கையர்த் தொகுத்து, இனி |
|
எவ் ஊர் நின்றன்று மகிழ்ந! நின் தேரே? |
|
இதுவும் அது. 2 |
63 |
பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர்நாய் |
|
வாளை நாள் இரை பெறூஉம் ஊர! |
|
எம் நலம் தொலைவது ஆயினும் |
|
துன்னலம் பெரும! பிறர்த் தோய்ந்த மார்பே. |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து கூறியது. 3 |
64 |
அலமரல் ஆயமொடு அமர்துணை தழீஇ |
|
நலம் மிகு புதுப் புனல் ஆட, கண்டோர் |
|
ஒருவரும் இருவரும் அல்லர்; |
|
பலரே தெய்ய; எம் மறையாதீமே. |
|
தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள் அவன் மறைத்துழிச் சொல்லியது. 4 |
65 |
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் |
|
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர! |
|
புதல்வனை ஈன்ற எம் மேனி |
|
முயங்கன்மோ தெய்ய; நின் மார்பு சிதைப்பதுவே. |
|
ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. 5 |
66 |
உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ: |
|
யார் அவள், மகிழ்ந! தானே தேரொடு, |
|
தளர் நடைப் புதல்வனை உள்ளி, நின் |
|
வள மனை வருதலும் வௌவியோளே? |
|
புதல்வனைப் பிரியாதவன் பிரிந்து, புறத்துத் தங்கி, வந்தானாக, அவனோடு புலந்து தலைமகள் சொல்லியது. 6 |
67 |
மடவள் அம்ம, நீ இனிக் கொண்டோளே |
|
'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் |
|
பெரு நலம் தருக்கும்' என்ப: விரிமலர்த் |
|
தாது உண் வண்டினும் பலரே, |
|
5 |
ஓதி ஒள் நுதல் பசப்பித்தோரே. |
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை புறன் உரைத்தாள் எனக் கேட்ட தலைவி தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது. 7 |
68 |
கன்னி விடியல், கணைக் கால் ஆம்பல் |
|
தாமரை போல மலரும் ஊர! |
|
பேணாளோ நின் பெண்டே |
|
யான் தன் அடக்கவும், தான் அடங்கலளே? |
|
பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறி வைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினாளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. 8 |
69 |
கண்டனெம் அல்லமோ, மகிழ்ந! நின் பெண்டே? |
|
பலர் ஆடு பெருந் துறை, மலரொடு வந்த |
|
தண் புனல் வண்டல் உய்த்தென, |
|
உண்கண் சிவப்ப, அழுது நின்றோளே! |
|
தலைமகன் பெதும்பைப் பருவத்தாள் ஒரு பரத்தையைக் களவில் மணந்து ஒழுகுகின்றதனை அறிந்த தலைமகள், 'தனக்கு இல்லை' என்று அவன் மறைத்துழிச் சொல்லியது. 9 |
70 |
பழனப் பல் மீன் அருந்த நாரை |
|
கழனி மருதின் சென்னிச் சேக்கும் |
|
மா நீர்ப் பொய்கை யாணர் ஊர! |
|
தூயர்; நறியர் நின் பெண்டிர்: |
|
5 |
பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே. |
பரத்தையரோடு பொழுது போக்கி நெடிது துய்த்து வந்த தலைமகனோடு தலைமகள் புலந்து சொல்லியது. 10 |