| 
101-110 | 
| 101 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண் | |
| 
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு | |
| 
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள் | |
| 
பூப் போல் உண்கண் மரீஇய | |
| 
5 | 
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே. | 
| 
அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1 | 
| 102 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர் | |
| 
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது, | |
| 
துன்புறு துயரம் நீங்க, | |
| 
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே. | |
| 
இதுவும் அது. 2 | 
| 103 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு | |
| 
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் | |
| 
இவட்கு அமைந்தனனால் தானே; | |
| 
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே. | |
| 
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3 | 
| 104 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப் | |
| 
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய் | |
| 
நள்ளென வந்த இயல் தேர்ச் | |
| 
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே. | |
| 
புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4 | 
| 105 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல் | |
| 
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் | |
| 
தண்ணம் துறைவன் வந்தென, | |
| 
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே. | |
| 
அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5 | 
| 106 | 
| 
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத் | |
| 
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் | |
| 
தண் கடல் வளையினும் இலங்கும் இவள் | |
| 
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. | |
| 
அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6 | 
| 107 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி | |
| 
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து, | |
| 
தண் கடல் படு திரை கேட்டொறும், | |
| 
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. | |
| 
தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7 | 
| 108 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய | |
| 
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் | |
| 
எம் தோள் துறந்தனன்ஆயின், | |
| 
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே? | |
| 
அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8 | 
| 109 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல் | |
| 
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன் | |
| 
எம் தோள் துறந்த காலை, எவன்கொல் | |
| 
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே? | |
| 
அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9 | 
| 110 | 
| 
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை | |
| 
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை | |
| 
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர் | |
| 
பிறிது ஒன்றாகக் கூறும்; | |
| 
5 | 
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே? | 
| 
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 |