211-220 |
211 |
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன |
|
வயலைஅம் சிலம்பின் தலையது |
|
செயலைஅம் பகைத் தழை வாடும் அன்னாய்! |
|
தலைமகன் ஆற்றாமை கண்டு, கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது. 1 |
212 |
சாத்த மரத்த பூழில் எழு புகை |
|
கூட்டு விரை கமழும் நாடன் |
|
அறவற்கு எவனோ, நாம் அகல்வு? அன்னாய்! |
|
வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்தவழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 2 |
213 |
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்ந்த |
|
ஈர்ந் தண் பெரு வடு, பாலையில், குறவர், |
|
உறை வீழ் ஆலியின், தொகுக்கும் சாரல் |
|
மீமிசை நல் நாட்டவர் வரின், |
|
5 |
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்! |
வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் சொல்லியது. 3 |
214 |
சாரல் பலவின் கொழுந் துணர் நறும் பழம் |
|
இருங் கல் விடர் அளை வீழ்ந்தென, வெற்பில் |
|
பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன், |
|
பேர் அமர் மழைக் கண் கலிழ, தன் |
|
5 |
சீருடை நல் நாட்டுச் செல்லும் அன்னாய்! |
தலைமகன், 'ஒருவழித் தணப்பல்' என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 4 |
215 |
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி, |
|
இட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர், |
|
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர் |
|
தீம் குழல் ஆம்பலின், இனிய இமிரும் |
|
5 |
புதல் மலர் மாலையும் பிரிவோர் |
அதனினும் கொடிய செய்குவர் அன்னாய்! |
|
இரவுக்குறி நயந்த தலைமகள், பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியது. 5 |
216 |
குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை, |
|
நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற |
|
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின் |
|
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு, |
|
5 |
கொய்தரு தளிரின் வாடி, நின் |
மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்! |
|
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6 |
217 |
பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ |
|
மான் இனப் பெருங் கிளை மேயல் ஆரும் |
|
கானக நாடன் வரவும், இவள் |
|
மேனி பசப்பது எவன்கொல்? அன்னாய்! |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது. 7 |
218 |
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்; |
|
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்; |
|
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி |
|
எழுதரு மழையின் குழுமும் |
|
5 |
பெருங் கல் நாடன் வரும்கொல்? அன்னாய்! |
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, 'இஃது என் ஆம் கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, 'கடிதின் வந்து வரைவான்' எனச் சொல்லியது. 8 |
219 |
கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ |
|
இருங் கல் வியல் அறை வரிப்பத் தாஅம் |
|
நல் மலை நாடன் பிரிந்தென, |
|
ஒள் நுதல் பசப்பது எவன்கொல்? அன்னாய்! |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 9 |
220 |
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி |
|
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன் |
|
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு |
|
முயங்காது கழிந்த நாள், இவள் |
|
5 |
மயங்கு இதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்! |
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 |