301-310 |
301 |
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர், |
|
அருஞ் சுரம் செல்வோர், சென்னிக் கூட்டும் |
|
அவ் வரை இறக்குவை ஆயின், |
|
மை வரை நாட! வருந்துவள் பெரிதே. |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது 1 |
302 |
அரும்பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே; |
|
பெருந் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்; |
|
செல்லாய் ஆயினோ நன்றே |
|
மெல்லம் புலம்ப! இவள் அழப் பிரிந்தே. |
|
பொருள்வயிற் பிரியும் தலைமகன், 'பிரிவு உடன்படுத்த வேண்டும்' என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது. 2 |
303 |
புதுக் கலத்தன்ன கனிய ஆலம் |
|
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ் சுரம் |
|
தண்ணிய இனிய ஆக; |
|
எம்மொடும் சென்மோ, விடலை! நீயே. |
|
சுரத்து அருமை கூறி உடன் செலவு மறுக்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 3 |
304 |
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய |
|
ஆன் நீர்ப் பத்தல் யானை வௌவும் |
|
கல் அதர்க் கவலை செல்லின், மெல் இயல் |
|
புயல் நெடுங்கூந்தல் புலம்பும்; |
|
5 |
வய மான் தோன்றல்! வல்லாதீமே. |
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 4 |
305 |
களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது, |
|
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து, |
|
சுடர்த் தொடிக் குறுமகள் இனைய, |
|
எனைப்பயம் செய்யுமோ விடலை! நின் செலவே? |
|
'உடன்போக்கு ஒழித்துத் தனித்துச் செல்வல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 5 |
306 |
வெல்போர்க் குருசில்! நீ வியன் சுரன் இறப்பின், |
|
பல் காழ் அல்குல் அவ் வரி வாட, |
|
குழலினும் இனைகுவள் பெரிதே |
|
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே. |
|
பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை கூறியது. 6 |
307 |
ஞெலி கழை முழங்குஅழல் வயமா வெரூஉம் |
|
குன்றுடை அருஞ் சுரம் செலவு அயர்ந்தனையே; |
|
நன்று இல, கொண்க! நின் பொருளே |
|
பாவை அன்ன நின் துணைப் பிரிந்து வருமே. |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழி, தோழி அதனை இழித்துக் கூறியது. 7 |
308 |
பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின் |
|
பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க் |
|
கால் எறுழ் ஒள் வீ தாஅய |
|
முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே. |
|
'பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி, 'பிரியாதொழியப் பெறின் நன்று; பிரிவையாயின் இப் பருவத்து இம் மாமலை எங்களை விட்டுப் பிரிந்தால் பிரி', எனச் சொல்லியது. 8 |
309 |
வேனில் திங்கள் வெஞ் சுரம் இறந்து |
|
செலவு அயர்ந்தனையால் நீயே; நன்றும் |
|
நின் நயந்து உறைவி கடுஞ் சூல் சிறுவன் |
|
முறுவல் காண்டலின், இனிதோ |
|
5 |
இறு வரை நாட! நீ இறந்து செய் பொருளே? |
'பொருள் வயிற் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 9 |
310 |
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல், |
|
இலங்கு வளை மென் தோள், இழை நிலை நெகிழப் |
|
பிரிதல் வல்லுவைஆயின், |
|
அரிதே விடலை! இவள் ஆய்நுதல் கவினே! |
|
பிரிகின்ற தலைமகற்குத் தோழி, 'நீ நினைக்கின்ற கருமம் முடித்தாய் ஆயினும், இவள் நலம் மீட்டற்கு அரிது' எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தது. 10 |