311-320 |
311 |
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும், |
|
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம் |
|
காடு இறந்தனரே காதலர்; |
|
'நீடுவர்கொல்' என நினையும், என் நெஞ்சே! |
|
'ஆற்றது அருமை நினைந்து, நீ ஆற்றாயாதல் வேண்ட; அவர் அவ்வழி முடியச் சென்றார்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 1 |
312 |
அறம் சாலியரோ! அறம் சாலியரோ! |
|
வறன் உண்டாயினும், அறம் சாலியரோ! |
|
வாள் வனப்பு உற்ற அருவிக் |
|
கோள் வல் என்னையை மறைத்த குன்றே. |
|
உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, 'நின் ஐயன்மார் பின் துரந்து வந்த இடத்து நிகழ்ந்தது என்னை?' என்ற தோழிக்கு நிகழ்ந்தது கூறி, தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது. 2 |
313 |
தெறுவது அம்ம, நும் மகள் விருப்பே |
|
உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய், |
|
பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க, |
|
நாடு இடை விலங்கிய வைப்பின் |
|
5 |
காடு இறந்தனள், நம் காதலோளே! |
தலைமகள் புணர்ந்து உடன்போகியவழி, செவிலி ஆற்றாமை கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது. 3 |
314 |
'அவிர் தொடி கொட்ப, கழுது புகவு அயர, |
|
கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ, |
|
சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும் |
|
நீள் இடை அருஞ் சுரம்' என்ப நம் |
|
5 |
தோள் இடை முனிநர் சென்ற ஆறே. |
தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களில் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 |
315 |
பாயல் கொண்ட பனி மலர் நெடுங் கண் |
|
பூசல் கேளார் சேயர் என்ப |
|
இழை நெகிழ் செல்லல் உறீஇ, |
|
கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே. |
|
சொல்லாது தலைமகன் பிரிந்துழி, தலைமகள் வேறுபாடு கண்ட தோழி இரங்கிச் சொல்லியது. 5 |
316 |
பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த, |
|
தேர் அகல் அல்குல் அவ் வரி வாட, |
|
இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப் |
|
புல் அரை ஓமை நீடிய |
|
5 |
புலி வழங்கு அதர கானத்தானே. |
தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6 |
317 |
சூழ்கம் வம்மோ தோழி! பாழ்பட்டுப் |
|
பைது அற வெந்த பாலை வெங் காட்டு |
|
அருஞ் சுரம் இறந்தோர் தேஎத்துச் |
|
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே! |
|
தலைமகன் பிரிந்து நீட்டித்துழி, நெஞ்சினைத் தூது விட்ட தலைமகள், அது வாராது தாழ்த்துழி, தோழிக்குச் சொல்லியது. 7 |
318 |
ஆய் நலம் பசப்ப, அரும் படர் நலிய, |
|
வேய் மருள் பணைத் தோள் வில் இழை நெகிழ, |
|
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து |
|
ஓடு எரி நடந்த வைப்பின், |
|
5 |
கோடு உயர் பிறங்கல், மலை இறந்தோரே. |
'நம்மைப் பிரியார்' என்று கருதியிருந்த தலைமகள், அவன் பிரிந்துழி, இரங்கிச் சொல்லியது. 8 |
319 |
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின், |
|
மண் புரை பெருகிய மரம் முளி கானம் |
|
இறந்தனரோ நம் காதலர்? |
|
மறந்தனரோதில் மறவா நம்மே? |
|
தலைமகன் பிரிந்துழி, அவன் உணர்த்தாது பிரிந்தமை கூறிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9 |
320 |
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ, |
|
முழங்குஅழல் அசைவளி எடுப்ப, வானத்து |
|
உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும் |
|
கவலை அருஞ் சுரம் போயினர் |
|
5 |
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே. |
தலைமகன் பிரிந்துழிச் சுரத்து வெம்மை நினைந்து, தலைமகள் சொல்லியது. 10 |