391-400 |
391 |
மறு இல் தூவிச் சிறு கருங் காக்கை! |
|
அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப் |
|
பச்சூன் பெய்த பைந் நிண வல்சி |
|
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ; |
|
5 |
வெஞ்சின விறல் வேல் காளையொடு |
அம்சில் ஓதியை வரக் கரைந்தீமே. |
|
உடன்போகிய தலைமகள் மீடற்பொருட்டு, தாய் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது. 1 |
392 |
வேய் வனப்பு இழந்த தோளும், வெயில் தெற |
|
ஆய்கவின் தொலைந்த நுதலும், நோக்கிப் |
|
பரியல் வாழி, தோழி! பரியின், |
|
எல்லை இல் இடும்பை தரூஉம் |
|
5 |
நல் வரை நாடனொடு வந்தமாறே. |
உடன்போய் மீண்டு வந்த தலைமகள் வழிவரல் வருத்தங் கண்டு, ஆற்றாளாகிய தோழிக்குச் சொல்லியது. 2 |
393 |
துறந்ததற் கொண்டு துயர் அடச் சாஅய், |
|
அறம் புலந்து பழிக்கும் அளைகணாட்டி! |
|
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக |
|
வந்தனளோ நின் மட மகள் |
|
5 |
வெந் திறல் வெள் வேல் விடலை முந்துறவே? |
உடன்போய்த் தலைமகள் மீண்டு வந்துழி, அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. 3 |
394 |
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த |
|
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற; |
|
வெஞ் சுரம் இறந்த அம் சில் ஓதி, |
|
பெரு மட மான் பிணை அலைத்த |
|
5 |
சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே. |
உடன்போய்த் தலைமகள் வந்துழி, தாய் சுற்றத்தார்க்குச் சொல்லியது. 4 |
395 |
முளி வயிர்ப் பிறந்த, வளி வளர் கூர் எரிச் |
|
சுடர் விடு நெடுங் கொடி விடர் முகை முழங்கும் |
|
இன்னா அருஞ் சுரம் தீர்ந்தனம்; மென்மெல |
|
ஏகுமதி வாழியோ, குறுமகள்! போது கலந்து |
|
5 |
கறங்கு இசை அருவி வீழும், |
பிறங்கு இருஞ் சோலை, நம் மலை கெழு நாட்டே. |
|
உடன்போய் மீள்கின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. 5 |
396 |
புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின் |
|
கதுப்பு அயல் அணியும் அளவை, பைபயச் |
|
சுரத்திடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை! |
|
கல் கெழு சிறப்பின் நம் ஊர் |
|
5 |
எல் விருந்து ஆகிப் புகுகம், நாமே. |
இதுவும் அது. 6 |
397 |
'கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை |
|
குருளைப் பன்றி கொள்ளாது கழியும் |
|
சுரம் நனி வாராநின்றனள்' என்பது |
|
முன்னுற விரைந்த நீர் உரைமின் |
|
5 |
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே. |
உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன் ஊர்க்குச் சொல்கின்றாரைக் கண்டு கூறியது. 7 |
398 |
'புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி, |
|
மட மான் அறியாத் தட நீர் நிலைஇ, |
|
சுரம் நனி இனிய ஆகுக!' என்று |
|
நினைத்தொறும் கலிழும் என்னினும் |
|
5 |
மிகப் பெரிது புலம்பின்று தோழி! நம் ஊரே. |
தலைமகள் மீண்டு வந்துழி, அவட்குத் தோழி கூறியது. 8 |
399 |
'நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும், |
|
எம் மனை வதுவை நல் மணம் கழிக' எனச் |
|
சொல்லின் எவனோ மற்றே வென் வேல், |
|
மை அற விளங்கிய கழல்அடி, |
|
5 |
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே? |
உடன் கொண்டுபோன தலைமகன் மீண்டு தலைவியைத் தன் இல்லத்துக்கொண்டு புக்குழி, 'அவன் தாய் அவட்குச் சிலம்பு கழி நோன்பு செய்கின்றாள்' எனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குச் சொல்லியது. 9 |
400 |
மள்ளர் அன்ன மரவம் தழீஇ, |
|
மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும் |
|
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில், |
|
'காதல் புணர்ந்தனள் ஆகி, ஆய் கழல் |
|
5 |
வெஞ் சின விறல் வேல் காளையொடு |
இன்று புகுதரும்' என வந்தன்று, தூதே. |
|
உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி, 'தலைவனோடு இன்று வரும்' எனக் கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. 10 |