அத்தப் பலவின் |
351 |
அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய், |
|
அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும் |
|
காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி |
|
பல் இதழ் உண்கண் மடந்தை! நின் |
|
5 |
நல் எழில் அல்குல் வாடிய நிலையே. |
பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1 |