அம் சில் ஓதி

49
அம் சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில் மீன் சொரிந்து, பல் நெற்பெறூஉம்
யாணர் ஊர! நின் பாண்மகன்
யார் நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே?

பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள் தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது. 9

உரை

Home
HOME