அம் சில் ஓதி |
49 |
அம் சில் ஓதி அசைநடைப் பாண்மகள் |
|
சில் மீன் சொரிந்து, பல் நெற்பெறூஉம் |
|
யாணர் ஊர! நின் பாண்மகன் |
|
யார் நலம் சிதையப் பொய்க்குமோ, இனியே? |
|
பாணன் வாயிலாகப் பரத்தையோடு கூடினான் என்பது கேட்ட தலைமகள் தனக்கும் பாணனால் காதன்மை கூறுவிப்பான் புக்க தலைமகற்குச் சொல்லியது. 9 |