அம்ம வாழி தோழி அவிழ் இணர்க் |
331 |
அம்ம வாழி, தோழி! அவிழ் இணர்க் |
|
கருங் கால் மராஅத்து வைகு சினை வான் பூ |
|
அருஞ் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள, |
|
இனிய கமழும் வெற்பின் |
|
5 |
இன்னாது என்ப, அவர் சென்ற ஆறே. |
தலைமகன் பிரிந்துழி, 'செல்லும் வழியிடத்து மலையின் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைத்து முடியச் செல்லார், மீள்வரோ?' எனக் கேட்ட தலைவிக்கு, 'அவர் முடியச் சென்றார்' என்பது அறிந்து, இரங்கித் தோழி கூறியது. 1 |