அம்ம வாழி தோழி ஊரன் வெம் முலை |
39 |
அம்ம வாழி, தோழி! ஊரன் |
|
வெம் முலை அடைய முயங்கி, நம் வயின் |
|
திருந்து இழைப் பணைத்தோள் நெகிழ, |
|
பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே. |
|
ஒரு ஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, 'அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான்' என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது. |