அம்ம வாழி தோழி சிறியிலைக் குறுஞ் சினை |
339 |
அம்ம வாழி, தோழி! சிறியிலைக் |
|
குறுஞ் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய |
|
வாவல் உகக்கும் மாலையும் |
|
இன்றுகொல், தோழி! அவர் சென்ற நாட்டே? |
|
தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு, ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9 |