அம்ம வாழி தோழி நம் ஊர் நளிந்து

222
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன்
இன்னினி வாராமாறுகொல்
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே?

குறி இரண்டன்கண்ணும் வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வந்து, சிறைப்புறத்து நின்றுழி, 'நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2

உரை

Home
HOME