அம்ம வாழி தோழி நம் ஊர் நளிந்து |
222 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர் |
|
நளிந்து வந்து உறையும் நறுந் தண் மார்பன் |
|
இன்னினி வாராமாறுகொல் |
|
சில் நிரை ஓதி! என் நுதல் பசப்பதுவே? |
|
குறி இரண்டன்கண்ணும் வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வந்து, சிறைப்புறத்து நின்றுழி, 'நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2 |