அம்ம வாழி தோழி நம்வயின் மெய் உற |
337 |
அம்ம வாழி, தோழி! நம்வயின் |
|
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் |
|
இனிய மன்ற தாமே |
|
பனி இருங் குன்றம் சென்றோர்க்குப் பொருளே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழி, தன் முயக்கினும் அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்தது எனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது. 7 |