அம்ம வாழி தோழி நென்னல் ஓங்குதிரை |
113 |
அம்ம வாழி, தோழி! நென்னல் |
|
ஓங்குதிரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு, |
|
ஊரார், 'பெண்டு' என மொழிய, என்னை, |
|
அது கேட்டு, 'அன்னாய்' என்றனள், அன்னை; |
|
5 |
பைபய 'எம்மை' என்றனென், யானே. |
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3 |