அம்ம வாழி தோழி பல் மாண் |
115 |
அம்ம வாழி, தோழி! பல் மாண் |
|
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய |
|
தண்ணம் துறைவன் மறைஇ, |
|
அன்னை அருங் கடி வந்து நின்றோனே! |
|
இற் செறிப்புண்ட பின்பும், வரைந்து கொள்ள நினையாது தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 5 |