அம்ம வாழி தோழி பாணன் சூழ் கழி |
111 |
அம்ம வாழி, தோழி! பாணன் |
|
சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச் |
|
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை |
|
பிரிந்தும் வாழ்துமோ நாமே |
|
5 |
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே? |
'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 1 |