அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒண் தொடி |
40 |
'அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து, தன் |
|
பெண்டிர் ஊர் இறைகொண்டனன்' என்ப |
|
கெண்டை பாய்தர அவிழ்ந்த |
|
5 |
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே. |
உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, அயற் பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதல்பரத்தை, அவர் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது |